நிறைவேற்று அதிகாரம் உடைய அரசியலமைப்பு நாட்டின் சாபக்கேடு – சபா.குகதாஸ் தெரிவிப்பு

இலங்கையானது பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறையே காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மவட்ட பொறுப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1978 ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்புடன் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறைதான் இந்த நாடு இவ்வளவு தூரம் பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு காரணமானது.

இந்த உண்மை தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளாலும் ஐனாதிபதி வேட்பாளர்களினாலும் பேசு பொருளாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை பலப்படுத்துவதில் ஐெயவர்த்னா முதல் கோட்டாபய வரை குறியாக இருந்துள்ளனர்.

இலங்கைத்தீவில் வாழும் சகல இனங்களுக்கும் நியாயமான அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு தடையாக இருப்பது இந்த சர்வ அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறைமை தான்.

அத்துடன் கடந்த காலத்தில் நாடு பெரும் யுத்த அழிவுகளையும் இனங்களிடையே குரோத எண்ணங்கள் மேலோங்குவதற்கும் இனங்களிடையே சந்தேகங்கள்இ பயங்கள் ஏற்படுவதற்கும் காரணமானது.

தமிழர்களின் அரசியல் அதிகாரங்கள் இருப்புக்கள் பறிபோவதற்கும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளை தமிழர் தரப்புக்குள்ளேயே உருவாக்கி மேலோங்கச் செய்வதில் பக்க பலமாக இருந்தது இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையே ஆகும்.

நாட்டில் அதிகார துஸ்பிரையோகம்இ சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மையை இழத்தல் இ மாகாணங்கள் ஆளுநர்களால் ஐனாதிபதிமாரின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆழப்படுதல் இ தேசியக் கொள்கைகள் ஆட்சிகள் மாற நிலையான தன்மையை இழத்தல்இ அயல் உறவுக் கொள்கைகள் மாற்றம் அடைதல் போன்றன நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறையால் நாட்டை மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன் உள் நாட்டு அரசியல் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவேஇ நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நிலையான அபிவிருத்திக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு நீக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பே அவசியம் எனவும் தெரிவித்தார்.