அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்தார் அலி சப்ரி

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வோசிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பிற்கு முன்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்காவிற்கு இலங்கையுடன் உள்ள நீண்;ட உறவை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் 75வருடத்தினை அடுத்த வருடம் கொண்டாடுகின்றோம் காலநிலை நெருக்கடி உட்பட சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் காலநிலை மாற்றம் குறித்தவிடயத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா 240 மில்லியன் டொலர் உதவிகளையும் கடன்களையும் வழங்கியுள்ளது,பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் அரசியல் ஸ்திரதன்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலி சப்றி அமெரிக்கா பயணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்கிழமை (நவ. 29) அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இன்று முதல் டிசம்பர் 4 வரை அமெரிக்காவிற்கான இவ்விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் அலி சப்ரி தனது விஜயத்தின் போது இராஜாங்க செயலாளர் பிளிங்கன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான வர்த்தகத்தை அதிகரிக்க பங்களாதேஷ் ஆர்வம்

பங்களாதேஷிற்கும் தெற்காசிய நாட்டிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கையுடன் நேரடி கப்பல் இணைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் A.K. அப்துல் மொமென் (A.K.Abdul Momen) வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் 22வது அமைச்சர்கள் கூட்டம் பங்களாதேஷில் இடம்பெறும் நிலையில், அங்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அலி சப்ரியுடன் பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் ஒரு சந்திப்பை நடத்தியபோது இந்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இருதரப்பு உறவுகளின் பரந்த அளவைப் பற்றி விவாதித்த இரு தலைவர்களும் இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் பிராந்தியத்தின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் இதன்போது, பங்களாதேஷில் இருந்து மலிவு விலையில் விவசாய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதை அதிகரிக்குமாறு இலங்கையை மொமன் வலியுறுத்தியுள்ளார்.

பங்களாதேஷுடன் நெருங்கிய பங்காளியாக செயற்படுவதற்கு தமது நாடு ஆர்வமாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்ரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார்.

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 22ஆவது கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரு அமைச்சர்களும் பங்காளதேஷிற்கு சென்றுள்ளனர். இதன்போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார அபிவிருத்தி, கடல்சார் மற்றும் சுற்றுலா துறைகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இருதரப்பு நலன்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளது – அலி சப்ரி

இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை  உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் மாநாடு பங்களாதேஷில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பரம் முன்னேற்றுவதற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்து சமுத்திர எல்லையிலுள்ள நாடுகளுடன் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உலகின் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றின் மையத்தில் இலங்கை மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகளுடனான இலங்கையின் பாரம்பரிய மற்றும் புராதன தொடர்புகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் புவியியல் மையமானது குறிப்பிடத்தக்க வகையில் எளிதாக்கப்பட்டதுடன், பல நூற்றாண்டுகளாக கடல் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கு உதவியது என்பதை அனுபவ ஆதாரங்கள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடல் வளங்களை நிலையான மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துவதில் இலங்கையின் முயற்சிகள் மற்றும் கடல் மாசுபாடு சவால்கள் மற்றும் கரையோரப் பகுதியையும் இந்தியப் பெருங்கடலையும் பாதுகாப்பதற்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது உறுப்பு நாடுகளுக்கு விளக்கினார்.

Posted in Uncategorized

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் உள்ளன – அலி சப்ரி

2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை யூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (10) அதன் தலைவர் அமைச்சர்  அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது வெளிநாட்டு சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளவர்களின் தரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையை வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதரகங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளில் பல இலங்கையர்கள் காலை முதல் நண்பல் வரை நீண்ட வரிசையில் நிற்பது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இது சிறந்ததொரு நிலைமை அல்ல என்றும், இதனைத் தவிர்ப்பதற்கு
முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதுடன், இதுபோன்ற சர்வதேசத்தின் அக்கறைகளை உள்நாட்டில் முகங்கொடுப்பதற்கான வழிகளை ஆராய்வதில் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
கடன் மீள்கட்டமைப்புச் செயற்பாடு தொடர்பில் பல்வேறு சர்வதேச நாடுகளுடன்
ஒருங்கிணைந்த அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் குறித்து சர்வதேச சட்டங்களே தீர்மானிக்கும் : விரும்பினால் அழைத்துவருவோம் : வெளிவிவகார அமைச்சர்

வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிங்கப்பூரில் இருந்து மீன்பிடிப் படகொன்றின் மூலம் சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு 303 இலங்கையர்கள் முயன்றிருந்த நிலையில் படகுக் கோளாறு காரணமாக தத்தளித்தவர்களை வியட்நாமிற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை நாட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தம்மை ஐ.நா.பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sabry tells Parliament some home truths – The Island

இவ்வாறான நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆபத்தான படகுப்பயணத்தில் பாதிக்கபட்டு வியட்நாமில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் மற்றும் விமானச் சீட்டுக்களை வழங்கி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுதிரும்ப மறுத்தால்?

எனினும் நாட்டில் காணப்படுகின்ற பொருளதார நெருக்கடிகளை மையப்படுத்தியே படகு மூலம் கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சிகளை குறித்த நபர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதை மறுப்பார்காளாக இருந்தால் அதன் பின்னர் சதேசச் சட்டங்களும் வியநட்நாமின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களும் தான் அவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்.

குறிப்பாக ஐ.நா.வின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உள்ளிட்ட தரப்பினரே தீர்மானங்களை எடுக்கவுள்ளனர் என்றார்.

நிதி அமைச்சர் பதவி மீண்டும் அலி சப்றிக்கு !

நிதி அமைச்சராக மீண்டும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நியமிக்க அரசாங்கம் ஆரம்பகட்ட இணக்கமொன்றுக்கு வந்துள்ளது.

புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஐவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குனவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருக்கு இடையே நடந்த சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்க முடியாது. அதன்படி, சமர்ப்பிக்கப்படும் வரவுச் செலவு திட்டத்தை மையப்படுத்தி அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்போது, வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை அமுல்ச் செய்வது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்புகளையும் பேச்சுவார்த்தையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது போன்ற பிரதான பொறுப்புக்களை  ஒப்படைத்து நிதி அமைச்சை அலி சப்றியிடம் மீள கையளிப்பது தொடர்பில் அவதானம் திரும்பியுள்ளது.

இதனைவிட, புதிதாக  5 அமைச்சரவை அமைச்சுக்களை  ஏற்படுத்த அவதானம் திரும்பியுள்ளதுடன்,  பொது ஜன பெரமுன கட்சியின் மூவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபலம் ஒருவரும் உள்ளடங்கலாக ஐவருக்கு அவற்றை வழங்கவும் ஆரம்பகட்டமாக பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.