கூட்டமைப்பின் அரசமைப்பு பிரதிநிதியாக சித்தார்த்தன் எம்.பி

அரசமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம சித்தார்த்தன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் எடுத்திருந்தது.

21ஆவது திருத் தத்தின் மூலம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள அரசமைப்பு பேரவையில், 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். சபாநாயகர் இதன் தலைவராக செயல்படுவார். பதவி வழியாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலா ஒரு பிரதிநிதியை பெயரிடுவர். பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும், சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் அரசமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பர்.

இந்த வகையில், பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினராக த. சித்தார்த்தனை நியமிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றகுழு ஏகமனதாக தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது